மதுரைக்கு மந்திரி வந்தது
உங்கள் பணத்தில் – என் பணத்தில் !
நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான்
வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/-
இதில் வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/-
கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே
காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %,
சில 12 % )
நம் மக்கள் நிறைய பேர் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் – வருமான வரி
(இன்கம் டாக்ஸ்)மட்டும் தான் வரி என்று.
ஆகையால் வருமான வரி கட்டுபவர் மட்டும்
தான் அரசுக்கு வரி கட்டுகிறார்கள் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனும் –
ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விதத்தில்
அரசாங்கத்துக்கு வரி கட்டிக்கொண்டிருக்கிறான்.
சும்மா ஓட்டலுக்குப் போய் காப்பி குடித்தால் கூட,
(பில் போடும் ஓட்டலாக இருந்தால் )
நீங்களும் நானும் வரி கட்டுகிறோம்.
இந்த வரிப் பணத்தில் தான் –
நேற்று டஜன் கணக்கில் மாநில மந்திரிகளும்,
4 மத்திய மந்திரிகளும்
(சிலர் ரயிலிலும்,
சிலர் காரிலும்,
ஒரு சிலர் விமானத்தில்
டெல்லியிலிருந்தும் )
ஒரு திருமணத்தில்
கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டு விட்டுப்
போயிருக்கிறார்கள்.
இது யாருக்கும் உறுத்தலாக இல்லை !
ரொம்ப நாள் முன்னதாக ஒரு நாடகம்
வந்தது –
தலைப்பு “யாருக்கும் வெட்கமில்லை!”
இதையெல்லாம் யார் மைந்தா யோசிக்கிறோம்.குவார்ட்டரும்,பணமும்,இலவசமும் இருந்தா போதும் என எண்ணும் போக்கு மாறவேண்டும்.
அரவரசன்