ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————-
நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார்
என்பது தான் உங்களுக்குத் தெரியுமே !
அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை
உங்களுக்கு மறந்து போயிருக்கலாம்
என்பதால் –

இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன்
இதே வலைத்தளத்தில் நான் எழுதி இருந்த
ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா
என்கிற இடுகையை மீண்டும் ஒரு முறை
பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
என்று தோன்றியது  எனவே  மீண்டும் –

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

அதை அவ்வளவு சுலபமாகச்
சொல்லி விட மாட்டேன்.
இந்த இடுகையை முழுவதுமாகப்
படியுங்கள் – தெரியும் !

இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப்
பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை
சுமார் 11 லட்சம்.

இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக
நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை
ஆண்டுக்கு சுமார் 32,000 மட்டுமே.இந்த
நிதானத்தில் இருந்தால் இவர்கள் எல்லாரும்
பார்வை பெறுவது என்று ?

கண் தானம் செயவது அப்படி என்ன பெரிய காரியமா?
அப்படி ஒன்றுமில்லை. நமக்கு பயன்படாததைத் தான்
பிறருக்கு கொடுக்கப் போகிறோம் – இதில் என்ன கஷ்டம் ?

மண்ணுக்கு கொடுப்பதையோ,
நெருப்புக்கு கொடுப்பதையோ
பார்வை இல்லாத பாவப்பட்ட  மனிதருக்குக்
கொடுத்தால் தான் என்ன ?

சில தகவல்கள் –

ஒருவர் தானம் செய்தால் –
இருவருக்கு பார்வை கிடைக்கும்.

ஒரு வயதுக்கு மேற்பட்டவர் –
எவ்வளவு வயதானவராக
இருந்தாலும் கொடுக்கலாம்.

கண்ணாடி அணிந்தவராக இருந்தாலும்,
காடராக்ட் செய்து கொண்டவராக இருந்தாலும்,
ரத்தக்கொதிப்பு உள்ளவராக இருந்தாலும்,
சர்க்கரை நோய் உள்ளவராக இருந்தாலும்,
கண்களைத்தவிர மற்ற இடங்களில் கேன்சர்
உள்ளவராக இருந்தாலும் கூட பரவாயில்லை.
தானம் கொடுக்க தகுதி உடையவர்களே !

இறந்து 6 மணி நேரத்துக்குள்ளாக கண்கள்
சேகரிக்கப்பட வேண்டும்.

இதற்கு ஆகும்  நேரம் வெறும்
20 நிமிடங்கள் மட்டுமே !

இதை எங்கு வேண்டுமானாலும் டாக்டர்கள்
மிகச்சுலபமாக செய்து விட முடியும் – இதற்காக
உடலை மருத்துவ மனைக்கு
கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை.
வீட்டிலோ, ஆம்புலன்சிலோ – ஏன்
இடுகாட்டிலேயே கூடவோ  செய்யலாம்.
எந்தவித விகாரமும் தெரியாது. அந்த இடத்தில்
செயற்கை கண்கள் உடனடியாக வைக்கப்படும்.

இறந்தவர் கண்களை மூடி, அதன் மேல்  ஈரப் பஞ்சை
வைத்து கண்களை ஈரமாக வைத்திருந்தால்  நல்லது.

இறந்தவர் தானம் செய்ய எழுதிக்கொடுத்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை.  நெருங்கிய உறவினர்
தகவல்/சம்மதம் கொடுத்தாலே போதுமானது.

அருகில் உள்ள கண் வங்கியிலோ அல்லது அரசு பொது
மருத்துவ மனையிலோ தகவல் கொடுக்கலாம்.
உடனே டாக்டர்கள் வருவார்கள். அகில இந்திய அளவில்
இலவச தொலைபேசி எண் – 1919 க்கு தொடர்பு
கொண்டாலும் ( 24 மணி நேரமும் வேலை செய்யும் )
தேவையான தகவல்கள்  கிடைக்கும்.

இனிமேல் தலைப்புக்கு வரலாம்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் கண்தானம் செய்ய
எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

கார்னியாவைப் பொறுத்த வரையில் உலக அழகியாக
இருந்தாலும், உள்ளூர் அழகியாக இருந்தாலும் –
நீங்களாக இருந்தாலும் – நானாக இருந்தாலும்
ஒன்று தான்.

எழுதிக்கொடுப்பது கூட முக்கியமில்லை. இதைப்பற்றிய
விழிப்புணர்வை – செய்தியை பரப்புவது தான் முக்கியம்.

நாம் மனம் வைத்து முனைந்தால்- இரண்டே வருடங்களில்
காத்திருப்போர் பட்டியலே(waiting list)
இல்லாமல் செய்து விடலாம். சரி தானே நண்பர்களே !
செய்யலாமா ?

எப்போது, யாரிடமிருந்து இறப்புச் செய்தியைக்
கேள்விப்பட்டாலும்,
சம்பிரதாயமாகப் பேச வேண்டியதைப் பேசிய பின்னால்
தொடர்ச்சியாக, தவறாமல் கேட்க வேண்டிய கேள்வியாக
இதை வைத்துக்கொள்வோமே –

“கண் வங்கிக்கு தகவல் கொடுத்து விட்டீர்களா ?”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

  1. ஜோதிஜி சொல்கிறார்:

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. RAJASEKHAR.P சொல்கிறார்:

    தானம் செய்வதில் சிறந்தது கண்தானம் பாராட்டுக்கள் !

  3. s.n.manoharan சொல்கிறார்:

    Great effort kaveri maindan,,,

  4. s.n.manoharan சொல்கிறார்:

    i am subscribed to receive mails

  5. நற்றமிழன் சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் நண்பர்.காவிரி மைந்தன்.

    கண் தானம் என்ற உடனே நான் எழுதிய இவ்விரு வரிகள் என் நினைவில் வருகின்றன.

    உள்ளூற உறங்கிய பின்னும்
    உலகம் காண்போம் வாருங்கள்…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அருமையான,
      கவிதை நயம் மிக்க
      கருத்து வெளியீடு..

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.