வசிய எண்ணெய் -இந்த எண்ணெயுடன்
உங்களது ரத்தம்/ சிறுநீர் சிறிது கலந்து…..
“வசிய எண்ணெய் – ரூ.5000/-
இந்த எண்ணெயுடன் உங்களது ரத்தம்/ சிறுநீர்
சிறிது கலந்து ஒரு வாரம் வைத்திருந்து –
விரும்பியவருக்கு தலையில் சிறிது தடவவும்.
இரண்டு, மூன்று முறை வைத்தால்
போதும். மேலும் அவர்கள் உபயோகிக்கும்
தேங்காய் எண்ணெயில் கலந்து விடவும்.
எதிரிகள் காலம் முழுவதும் வசியமாவார்கள்.”
பயங்கரமாக இருக்கிறதே – இது என்ன
என்று கேட்கிறீர்களா ?
இந்த வாரம் துக்ளக் இதழில் வெளிவந்திருக்கும்
ஒரு முழு பக்க விளம்பரத்தின் ஒரு பகுதி.
(முழுவதும் படித்தால் அரண்டு விடுவீர்கள் !)
துக்ளக் வார இதழில் எப்படி இத்தகைய
விளம்பரம் வந்தது ?
1) துக்ளக் வாசகர்களை வாத்து மடையர்கள்
என்று எண்ணி விட்டார்களா ? இல்லை –
2) மந்திர தந்திரம் என்று சொன்னால், துக்ளக்
வாசகர்களை நம்ப வைப்பது சுலபம் என்று
நினைத்துக் கொண்டார்களா ? இல்லை –
3) துக்ளக் கில் விளம்பரம் செய்வது
மலிவானதா ? எளிதானதா ? இல்லை –
4) ஆசிரியர் “சோ” துக்ளக்கின் தரத்தை
பாதுகாப்பதில் அக்கரை இழந்து விட்டாரா ?
வார இதழ் தானே – நாளிதழ் இல்லையே !
அச்சுக்குப் போகும் முன்னர் ஆசிரியர்
அனைத்தையும் படித்து, பார்த்து –
ஒப்புதல் கொடுக்க வேண்டாமா ?
பிச்சுட்டீங்க, கா.மை.
சோவின் போறாத காலம் ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.
Knowing Cho as a disciple of another obstinate personality
மொரார்ஜி தேசாய் (ஆம் மூத்திரம் குடிக்கிறேன் அதில் என்ன தப்பு என பிதற்றியவர்),என் பத்திரிகையில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என இவர் கூறப் போவது நிச்சயம்.
//விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என இவர் கூறப் போவது நிச்சயம்.//
அப்படி முன்னமே ஒரு முறை கூறிவிட்டார் என்பது நினைவு.