பிரதமர் பதவிக்கு இன்னும் ஒரு காந்தி ….!
இது பிரியங்கா (வாத்ரா) காந்தி !!
ஆன மட்டும் முயற்சித்து பார்த்தும் ராகுல் காந்தியை
முன்னிலைப் படுத்தும் முயற்சியில் வெற்றி
பெறாததால், “அன்னை” சோனியா காந்தி,
ப்ளான்-2 வாக, மகள் பிரியங்காவையும்
தயார் படுத்த விரும்புகிறாராம்.
அதில் முதல்படி – உத்திரப் பிரதேச தேர்தலில்
பிரச்சாரத்தில் நுழையும் பிரியங்கா.
ஏற்கெனவே சகோதரர் ராகுலுக்காகவும், அன்னை
சோனியாவிற்காகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது
உண்டு என்றாலும், அப்போதெல்லாம் முதலிலேயே
தெளிவாகச் சொல்லி விடுவார். நான் தீவிர அரசியலில்
இல்லை – தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும்தான்
வந்திருக்கிறேன் என்று.
நேற்று ராகுலின் பாராளுமன்ற தொகுதியான ரே-பரேலிக்கு
வந்த பிரியங்கா, “இரண்டு தொகுதிகள் மட்டும்
தானா இல்லை உ.பி. முழுவதும் தேர்தல் பிரச்சாரம்
செய்வீர்களா” என்று கேட்டதற்கு “ராகுலுக்காக எதுவும்
செய்வேன்” என்று என்று ஒரு இடத்திலும்,
“நீங்களும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா”
என்று கேட்டவர்களுக்கு “ராகுல் விரும்பினால்
வருவேன்” என்று மற்றொரு இடத்திலும் பதில்
சொல்லி இருக்கிறார்.
இந்திரா காந்தியின் குடும்பத்திலிருந்து வந்தும்,
ராகுல் காந்தியின் பர்சனாலிடி, ஆளுமை,
தலைமைப்பண்பு, மக்களை ஈர்க்கும் சக்தி ஆகிய
எதுவுமே கடந்த 4 வருடங்களாக மக்களிடம்
எடுபடவில்லை.
ஆனால் – இதற்கு மாறாக, பிரியங்கா காந்தியால்
சுலபமாக மக்களைக் கவர முடிகிறது. அவர் வந்தால்
கூட்டம் வருகிறது. சாதாரண மக்களிடம், சகஜமாக,
கலகலப்பாக நெருங்கிப் பழக, அவரால் முடிகிறது.
மக்களை ஈர்க்கும் சக்தி அவரிடம் இருப்பது
நன்கு தெரிகிறது.
இருந்தாலும், அவரது தகுதி, திறமை,
அரசியல் அனுபவம், ஆட்சி அரசியலின்
நெளிவு சுழிவுகளை புரிந்து சமாளிக்கும் திறமை –
ஆகியவை குறித்து – உண்மையாகவே
யாருக்கும் எந்தவித அபிப்பிராயமும் இல்லை.
அவர் தீவிர அரசியலில் இறங்கி வந்தால் தான் –
பாட்டி இந்திராவைப் போல் இருப்பாரா இல்லை
அண்ணன் ராகுல் போலத்தானா என்பது தெரிய வரும்.
ஆனால், பிரியங்கா அரசியலில் தீவிரமாக
ஈடுபட்டால், பிறகு ராகுலுக்கு அங்கே வேலை
இருக்காது. அவருக்கு எந்த மரியாதையோ,
தேவையோ இருக்காது. ராகுல் காந்தி
மெக்ஸிகோவிற்கு மூட்டை கட்ட வேண்டியது தான்.
ராகுல் காந்தி அதிகாரத்திற்கு வந்தால் –
சோனியா காந்தி முக்கிய பின்னணியில் இருப்பார்.
ஆனால் பிரியங்கா அதிகாரத்திற்கு வந்தால் ……..
ஆமாம் ராபர்ட் வாத்ரா தான் பின்னணியில் இருப்பார்.
அய்யோ – நினைக்கவே பயமாக இருக்கிறதே !
வேண்டாம்ப்ப்ப்ப்ப்ப்பா …..
மன்மோகன் சிங்கே நிரந்தரப் பிரதமராக இருக்கட்டும் !
நாடு எக்கேடு கெட்டால் என்ன –
நமக்கு ஒழுங்காகத் தூக்கமாவது வரும் !!
ஒருவேளை பிரியங்காவின் முயற்சியும்(முகராசியும்) வெற்றி பெறவில்லை என்றால், அடுத்து இவரோட பிள்ளைகள் யாரவது தீவிர அரசியலுக்கு வருவார்களோ என்னவோ. இந்தியாவின் தலையெழுத்தை நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
/“ராகுல் விரும்பினால் வருவேன்”//
மக்கள் விரும்பணுமே!! 🙂
//அடுத்து இவரோட பிள்ளைகள் யாரவது தீவிர அரசியலுக்கு வருவார்களோ என்னவோ.//
அவர்களது பிள்ளைகள் ரெய்ஹன் மற்றும் மிரேயா ஆகியோரும் ரெடி.. இன்னும் பதினைந்தே வருடங்களில்! 🙂
காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி என்றுதான் ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள் 🙂