வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி -முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ??

வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி –

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ??

நீலப்படங்கள் பற்றிய விஷயங்களில் நமக்கு ஆர்வம இல்லை. ஆனால் மாட்டிக்கொண்ட காங்கிரஸ் விஐபி யின் ஒப்பனையைக் கலைப்பதிலும், முகத்திரையை கிழிப்பதிலும் நமக்கு நிச்சயம் ஆர்வமும் உண்டு -விருப்பமும் உண்டு !

எனவே தான் இந்த இடுகை !

அண்ணா ஹஜாரே குழுவினரின் ஜன்லோக்பால் போராட்டத்தின் போது இவர் ஆடாத ஆட்டம் உண்டா – பாடாத பாட்டு உண்டா ? அவர்கள் ஒவ்வொருவரையும் இவர் எப்படி எல்லாம் வசை பாடினார் – இழிவு படுத்த முயன்றார் ? ஏளனம் செய்தார் ? லோக்பால் மசோதாவை பரிசோதனை செய்யும் ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் என்கிற முறையில் அந்த மசோதாவிற்கு சமாதி கட்டியதும் இவர் தானே ? திக்விஜய்சிங், கபில்சிபல், அபிஷேக் சிங்வி இந்த மூன்று பெரும் சேர்ந்து பாராளுமன்றத்தில் வைக்கோல் திருடர் லல்லு பிரசாத்தையும் சேர்த்துக்கொண்டு மசோதாவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டது எப்படி அவ்வளவு சீக்கிரம் நமக்கு மறக்கும் ? இப்போதும், லோக்சபாவில் நிறைவேறிய மசோதா ராஜ்யசபாவில் வராதபடி அழுந்த அதன் மீது ஏறி உட்கார்ந்துகொண்டிருப்பதும் இவர் தானே ?

எனவே இவர் எதிலாவது சிக்கிக்கொண்டால் – அதன் மூலம் அவர் முகமூடி கிழிந்தால் – அதில் நமக்கு மெத்த சந்தோஷமே !

காங்கிரஸ் கட்சியின் அதிமேதாவிப் பேச்சாளர் – எப்படி இதில் அஜாக்கிரதையாக இருந்து விட்டார் என்பது தான் புரியவில்லை.

விஷயத்திற்கு வருவோம் –

கடந்த வாரம் டெல்லி மீடியாக்களில் ஒரு பரபரப்பான விஷயம் அடிபட்டது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், ஒரு பிரபல வக்கீல் – ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் கொண்ட சிடி ஒன்று சில மீடியாக்களுக்கு வந்திருப்பதாக. அதில் பெண்ணின் முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் வழக்கறிஞ்ரின் முகம் தெளிவாகவே தெரிந்ததாம் !

இவை மீடியாக்களுக்கு வந்த அதே வேகத்தில், டெல்லி உயர்நீதி மன்றத்தில், அபிஷேக் சிங்க்வியும், அவரது கூட்டாளி வக்கீலான அபிமன்யு பண்டாரி என்பவரும் – எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஒரு பெட்டிஷன் தாக்கல் செய்தனர் .

அந்த மனுவில் – அபிஷேக் மனு சிங்க்வியை மார்பிங் செய்து தயாரிக்கப்பட்ட – அவரை கேவலப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட – போலியான ஒரு ஆபாச செக்ஸ் சிடி மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதால், மீடியாக்கள் அதை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

ராஜ்ய சபா உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் – தலைமைக்கு மிகவும் வேண்டப்பட்டவர் – இத்தனை அதிமுக்கியத்துவம் உள்ள ஒருவரது மானம் காக்கப்பட வேண்டாமா ?

மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட மீடியாக்களுக்கு (ஆஜ்தக், ஹெட்லைன்ஸ் டுடே, மற்றும் இந்தியா டுடே தொலைக்காட்சி நிறுவனங்கள் )நோட்டீஸ் பிறப்பித்து உத்திரவு போட்டிருக்கிறது !

அபிஷேக் மனு சிங்வி தன் மனுவில் கூறியிருந்தது –

முகேஷ் குமார்லால் என்பவர் பல ஆண்டுகளாக சிங்க்வியிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் 17 தேதியிலிருந்து முன்கூட்டி தகவல் எதுவும் தெரிவிக்காமல் திடீரென்று வேலையை விட்டு நின்று விட்டார். மார்ச் 24 தேதியில் அவர் சிங்க்விக்கு பல sms களை அனுப்பினார். அவற்றில் சிங்க்வியின் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறியதோடு, அவரது ஒழுக்கம் பற்றியும் மிக கேவலமாக விமர்சித்திருந்தார். அதன் பின் சிங்க்வியை போனில் தொடர்பு கொண்டு பேசிய முகேஷ் தனக்கு மிகப்பெரிய தொகை அளிக்காவிட்டால், சிங்க்வியைப்பற்றி தவறான தகவல்களை பரப்பப்போவதாக மிரட்டினார். அவரது ஒழுக்கம் குறித்து தவறான தகவல் வெளியிடப்போவதாகவும், அவர் இடம் பெற்றுள்ள ஆபாச சிடியை மீடியாக்களிடம் வழங்கப்போவதாகவும் அவர் மிரட்டினார். மிகப்பெரிய தொகையை அளிக்கா விட்டால் வேறு தவறான புகார்களை தெரிவிக்கவும் தயங்க மாட்டேன் என்றும் எச்சரித்தார்.

சிங்வி சம்பந்தப்பட்ட உண்மையான ஆபாச சிடி எதுவும் கிடையாது. அப்படி ஒரு சிடி இருந்தால் அது மார்பிங் முறையில் தயாரிக்க்கப்பட்ட மோசடி சிடியாகத் தான் இருக்கும். ………. etc.etc….— இவ்வாறு போகிறது

மனு சிங்க்வியின் மனு !

இடையில் கடந்த மார்ச் 29 அன்று முகேஷ்குமார்லால் மீது சிங்க்வியின் சார்பாக அவரது வக்கீல் பண்டாரி டெல்லி குல்மொஹர்பார்க் காவல் நிலையத்தில் ஒரு புகாரும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ( ஏப்ரல் 18 ) திடீரென்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிரைவர் முகேஷ்குமார்லால் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பது – சிங்வி குடும்பம் மீது எனக்கு சில கோபங்கள் இருந்தன. நிறைய சம்பாதிக்கும் அவர்கள் எனக்கு மிகவும் குறைவான சம்பளம் தருகிறார்களே என்று அதிருப்தி இருந்தது ! ஒரு முறை சிங்க்வியின் நாய் என் மனைவியைக் கடித்தது. அந்த நாய்க்கடியால் தான் எங்கள் குழ்ந்தை சில பாதிப்புகளுடன் பிறந்ததாக கருதினேன் ! இந்த பிரச்சினைகளால் அவர்களை பழிவாங்க நினைத்தேன். பீகாரில் உள்ள தர்பங்க்காவை சேர்ந்த ஒரு கடைக்காரரிடம் சிங்வி தொடர்பான நான்கு மோசடி சிடிக்களை வாங்கினேன் ! அந்த சிடிக்கள் கிடைத்த பின் சிங்க்வியை மிரட்ட ஆரம்பித்தேன். அதில் இரண்டு சிடிக்களை பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்தேன். இப்போது எங்களுக்குள் ( முகேஷ், சிங்வி, மற்றும் பண்டாரி ) சமரசம் வந்து விட்டது. எனக்கு எதிரான இந்த வழக்கையும், போலீஸ் புகாரையும் வாபஸ் வாங்குவதாக அவர்கள் (சிங்க்வியும் பண்டாரியும் ) உறுதி அளித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இப்போதோ, எதிர்காலத்திலோ நஷ்டஈடு கோர மாட்டோம். எனக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க மாட்டோம் !!!!! கோர்ட்டில் புது வழக்கு எதுவும் தொடரமாட்டோம் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். …. etc, etc,…- இப்படிப் போகிறது டிரைவர் முகேஷ்குமார்லாலின மனு.

அதி புத்திசாலியான காங்கிரஸ் வக்கீல் சிங்வி – பதட்டத்தில் – மானம் பறிபோகிறதே என்கிற பதைபதைப்பில் படு முட்டாள்தனமான ஒரு போக்கில் வழக்கை எடுத்துச் செல்கிறார். எப்படி ?

எவ்வளவு அபத்தங்கள் பாருங்கள் –

முதலில சிங்க்வியின் மனுவிலிருந்து – அவரது டிரைவர் திடீரென்று வேலையிலிருந்து நின்றதுடன் அவரை மிரட்டி sms கள் அனுப்பினாராம். தொலைபேசியில் பேசி மிரட்டினாராம். நிறைய பணம் கொடுக்காவிட்டால் அவதூறு செய்வேன் என்று ப்ளாக் மெயில் செய்தாராம். சரி – பிரபல கிரிமினல் லாயர் -தன்னை ஒருவன் பயமுறுத்தி மெசெஜ் அனுப்பினால், நிச்சயம் அதை சேவ் செய்து ஆவணமாக பாதுகாத்திருக்க வேண்டாமா ? அதை சாட்சியமாக போலீசில் தர வேண்டாமா ? டெலிபோனில் மிரட்டியதையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் நிறைய பணம் என்று சொல்கிறார்களே தவிர – எவ்வளவு என்று தொகையை எங்குமே குறிப்பிடவில்லை என்ன காரணம் ? மற்றொரு முக்கியமான விஷயம் ஒருவரை யாரோ மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணுகிறார்கள் என்றால் – ஒன்று அவரே நேரடியாக புகார் கொடுக்க வேண்டும் – அல்லது அவர் சார்பாக அவரது வக்கீல் கொடுக்கலாம். இந்த விஷயத்தில், சிங்க்வியின் நண்பரும் ஒரு புகார் கொடுக்கிறார். சிங்க்வியும் புகார் கொடுக்கிறார் – இரண்டு பேர் புகார் கொடுக்க காரணம் என்ன ?

அடுத்து டிரைவரின் மனுவிலிருந்து –

ஒருவன் தன் முதலாளி மற்றொரு பெண்ணுடன் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு ஆபாச சிடி தயாரித்து மீடியாக்களுக்கு அனுப்பும் அளவிற்கு அளவிற்கா இந்த காரணங்கள் இருக்கின்றன ?

சம்பளம் குறைவாக கொடுத்தார்கள் – அவர்களது நாய் கடித்ததால் மனைவி குறைபாடுகளுடைய குழந்தையை பெற்றாள் – அபத்தமான இந்த காரணங்களைத் தவிர வேறு எந்த காரணத்தையும் மனுவில் சொல்லவில்லை என்பதே உண்மை மறைக்கப்படுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது !

போலி சிடிக்கள் எப்படி தயாரிக்கப்பட்டன என்பதை டிரைவர் விளக்கவில்லை. பீகாரில் தர்பங்காவில் கடையில் நாலு காப்பி சிடி வாங்கியதாக சொல்கிறார். இது என்ன சினிமா சிடியா – கடையில் ரெடியாக விற்கவும் வாங்கவும் ?

மார்பின் முறையில் தயாரிக்கப்பட்டது என்றால் அதைத் தயாரித்தது யார் ? மார்பிங் செய்ய இரண்டு ஒரிஜினல் சிடிக்கள் வேண்டுமே ! சிங்வி தொடர்பான சிடிக்கள் அவருக்கு எப்படி கிடைத்தன ?

கடைசி அபத்தம் புகாரை வாபஸ் பெற சிங்வி ஒப்புக்கொண்டதாக கூறுவது ! எதற்காக புகாரை வாபஸ் வாங்க வேண்டும் ? தன்னை அசிங்கமாக ஆபாச சிடி எடுத்து, மீடியாவிற்கு கொடுத்து ப்ளாக் மெயில் செய்து அவமானப்படுத்தியவனுடன் சிங்வி சமரசம் செய்து கொள்வது என் ?

அங்கே தான் இருக்கிறது அவரது பலவீனம் ! டிரைவைருடன் சமரசம் செய்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் சிங்வி இருப்பது தெரிகிறதே !

அப்படியானால் சிடியில் உள்ள விஷயம் நிரூபிக்கப்படக் கூடியது என்று தானே தோன்றுகிறது ? இன்னொரு விஷயம் –

டிரைவர் காணாமல் போனது மார்ச் 17

டெலிபோன் மூலம் ப்ளாக் மெயில் செய்தது மார்ச் 24

போலீசில் சிங்வி புகார் கொடுத்தது மார்ச் 29

டிரைவர் கோர்ட்டில் சமரச மனு கொடுத்தது ஏப்ரல் 18

புகார் கிடைத்த மார்ச் 29 முதல் ஏப்ரல 18 வரையிலான இடைப்பட்ட காலத்தில் போலீஸ் அந்த டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்காதது ஏன் ? பேரம் பேசி டிரைவரை வழிக்கு கொண்டு வர அவ்வளவு நேரம் தேவைப்பட்டதா ?

இந்த விஷயத்தில் அபத்தத்தின் சிகரம் ஒன்றும் உண்டு. இதில் இவர்கள் இரண்டு பெரும் சமரசம் செய்துகொண்டாலும் – மூன்று மீடியாக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. அந்த மீடியாக்கள் டிரைவர் முகேஷ்குமார்லால் மீது தங்களிடம் போலியான சிடியை கொடுத்து வெளியிட சொன்னதற்காக வழக்கை தொடரலாம். அதற்கு ஆதாரமாக அந்த டிரைவர் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ள சமரச மனு ஒன்றே போதும்.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல்கள் சங்கம் வேறு சிங்வி மீதான தங்கள் கடுப்பை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. இந்த போலி சிடி கதையை கேட்க நாங்கள் தயார் இல்லை சிங்க்விக்கும் அந்த பெண்ணுக்குமான உறவு ஏற்கெனவே பலர் அறிந்தது தான். இப்போது தான் டிரைவைர் தயவில் சிடி யாக வெளிவந்திருக்கிறது. ராஜ்ய சபா உறுப்பினரான அவர் மீது பாராளுமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனானப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மீதே விசாரணை நடக்கவில்லையா ? சிங்வி விஷயம் குறித்து வெளிப்படையான விதத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் !!

கடித்து, கிழித்து, குதற வேண்டிய இந்த விஷயத்தை மீடியாக்கள் இன்னும் நீதிமன்ற உத்திரவை எதிர்பார்த்து – அமைதியுடன் பொறுமை காத்திருக்கின்றன ! நமக்கென்ன தடை – நாமென்ன சிடியா வெளியிடுகிறோம் ? செய்தி விமரிசனம் தானே ? இதற்கேதும் தடை இதுவரை இல்லையே !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி -முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ??

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.

  2. Padmanabhan Potti சொல்கிறார்:

    ஆனானப்பட்ட கவர்னரே பெண் விஷயத்தில் மாட்டிக்கொண்டு ஓடி போய்விட்டார். தங்களுடைய விமர்சனத்திலிருந்து இவர்கள் ஏடாகூடமாக மாட்டிக்கொள்ளுவோம் என கருதியே தப்பை தப்பு தப்பாக செய்து தப்பிக்க பார்க்கிறார்கள். இவர்கள் மக்கள் மன்றத்தின் முன் பதில் சொல்ல வேண்டியவர்கள்தான்.

  3. Ganpat சொல்கிறார்:

    தலைக்கு மேலே வெள்ளம போனால்,
    சாண் என்ன முழம் என்ன??
    பணம் என்னும் சைத்தான் ,ஊழல என்னும் பேயின் கை சேர்த்து,
    நம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது.
    இந்த வெறி ஆட்டத்தில் ஒழுக்கம்,நேர்மை,வெட்கம், மானம், சூடு, சொரணை
    இவை போன இடங்கள் தெரியவில்லை.
    அறுபதை கடந்த என் நண்பர் எழுத எழுத,இந்தியாவில் உள்ள “ஆறு”களின் எதிர்காலத்தை நினைத்து நடுங்குகிறேன் நான்!
    தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா,இப்பயிரைக்
    கண்ணீரால் காத்தோம்,கருக திருவுளமோ!

  4. srini சொல்கிறார்:

    Dear Sir
    I was waiting for a post on this topic from you. and you really didnt disappoint your readers. It is a well written article. The congress team was sitting the whole week in Google youtube office to remove the upoloads of the cd content. As and when there is a upload, it was getting removed in 15 minutes time. But again, congress and sibal team was able to control the media but not the open internet world. There are multiple sites that have the cd content uploaded and people across world are downloading. There was not even a single word spoken about this whole episode by ndtv and barkha team. But Twitter and facebook is full of AMS jokes. I am listing below some catchy phrases for your blog readers to enjoy. Your postings are always very balanced and strikes at the heart. Continue the good work.
    some funny twitter comments on Abhishek Singhvi

    now abhishek manu singhvi will be confused when arnab tells him to take a ‘position’ during TV debates

    Abhishek Manu Singhvi now must be dreading 2 Persons – His Wife and Arnab Goswami

    What Rakhi Sawant will do as IB minister in current scenario ” broadcast Abhishek Manu Singhvi CD on HD channel”

    Abhishek Manu Singhvi believes in Big Bang Theory..!!

    Abhishek Manu Singhvi and Vibrators trending at the same time ! Need I say more?

    Abhishek Manu Singhvi is sitting inside YouTube’s office monitoring every video that is being upload.. but then there’s DailyMotion 🙂

    Abhishek Manu Singhvi is a lawyer but he always reads that as lay-her.

    Now I got to understand why Abhishek Manu Singhvi was chosen to screw the lokpal

    Why Nityananda’s tape was aired but not Abhishek Manu Singhvi’s? Because this comes under, Rajiv Gandhi Ashleelata Chupao Yojna 🙂

    I have always considered Abhishek Manu Singhvi to be an excellent pokesperson.

    Our politicians are staunchly committed to servicing our youth, especially in bed

    Media defends their double standards in not discussing Abhishek Manu Singhvi.Says they discuss only the aesthetically shot sex vids.

    Abhishek Manu Singhvi doesn’t believes in Vibrators. Being a Congress leader, he would rather prefer Party’s symbol, ‘Hand’
    Mahesh bhatt wants to make jism-3 with Abhishek Manu singhvi :-p
    One minute silence for the juniors who join under Abhishek Manu Singhvi for practicing

    Abhishek Manu Singhvi Ends his Career with Final “Discharge” of his Duties in the courtroom

    If true, Abhishek Manu Singhvi doesn’t mind being naked in front of other men.This explains why he’s always on News Hour with Arnab Goswami.
    Congress has transitioned Abhishek Manu Singhvi from official Spokes Person to their Official Sxx Person
    This sleaze contest between BJP and Congress is turning into a Formula One race. With Abhishek Manu Singhvi in the “pole” position
    Abhishek manu singhvi you are the man at this age if you can last for 7 minutes that too in supreme court chamber
    Wondering why there is no news about #Abhishek Manu Singhvi in any of the news channels . Proof of Media Controlled by Congress and Money
    After Abhishek Manu Singhvi incident..all th women judges elevted in last cple of years…will gt a wild stare frm their husbands
    Alternative career option for Abhishek Manu Singhvi : He can start a Juice center with the name ‘AbhiShakes’…
    Watch Abhishek Manu Singhvi’s video, if you wish to spend 14 minutes of your life staring at Law Books. Also there is a bald head in between

  5. எழில் சொல்கிறார்:

    நம் நாடு பல வழிகளில் அமெரிக்காவுக்கு நிகராக வளர்ந்து வருகிறது என்பதற்கு நல்ல எடுத்துகாட்டு. நான் ‘பார்த்த’ வரையில் சிங்வி ஒரு இந்தியன் கிளிண்டன்.

  6. பிரபு சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களுக்கு,

    நண்பர்கள் சொல்வது போல் உங்கள் இடுகை ஒவ்வொன்றும்
    அற்புதம். பச்சென்று குற்றவாளியின் மூஞ்சியில் குத்துவது போல் –
    ஆனால் நேர்மையாக, உண்மையாக, அழகான தமிழ்நடையில்
    மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான
    விஷயங்களை எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துப்பணி இன்று போல்
    என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
    இந்த நாய், அபிஷேக் சிங்வி இனி பொது நிகழ்ச்சிகளில் வந்தால்
    மக்கள் அவனை செருப்பால் அடிக்க வேண்டும். செருப்பு போனாலும்
    பரவாயில்லை புதிதாக வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அவனை
    செருப்பால் அடிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது.
    நண்பர் சீனி சொல்வது போல் காங்கிரஸ் கட்சியின் அதிகார பலமும்
    அவர்களது பணமும், என்டிடிவி பர்கா தத் கும்பலும் அவர்களை
    எவ்வளவு நாட்களுக்கு பாதுகாக்கும் பார்த்து விடுவோம்.
    நன்றி
    பிரபு

  7. venkataramani சொல்கிறார்:

    நிதியனந்தாவின் லீலைகள் அடங்கிய சி.டி ஐ ஆய்வு செய்த
    திரு.சந்திரசேகர், மார்பிங் என்பது ஒருவர் முகத்தை பிறிதொருவரின்
    முகத்தைக் கொண்டு மாற்றுவதோ மறைப்பதோ அல்ல. மாறாக, ஒரு
    பொருளை அல்லது ஒருவரது முகத்தை பெரிதாகவோ வேறுபடுத்தியோ
    காட்டுவது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலரும் சொல்லி கொள்வது
    போல ஒருவரின் செயல்பாட்டை எல்லாம் முழுமையாக மார்பிங் செய்ய
    முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். எனவே, சிங்க்வியின் மறுப்பை
    மார்பிங் பற்றி அறியாத நபரின் வாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  8. எழில் சொல்கிறார்:

    கா மை ஐயா, அந்த cd இல் வரும் பெண் வக்கீல் சிங்வி ‘தயவில்’ நீதிபதியாக நியமிக்க பட இருந்தார் என்று கூறபடுகிறதே கவனித்தீர்களா? அப்படியாயின் Singhvi is using his power to appoint some one for a post in return of a sexual favour. இது மிகவும் கீழ் தரமான குற்றமன்றோ?!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் எழில் ,
      நீங்கள் சொல்வது மிகவும் சரி –
      இவர்கள் முகத்தில்
      காரித்துப்ப வேண்டும் போலிருக்கிறது.
      சமுதாயத்தை கெடுக்கும் ஜந்துக்கள் இவை !

      -அடுத்த இடுகையை பாருங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.